- Get link
- X
- Other Apps
சுற்றுசூழல் என்பது நம்மை சுற்றி சூழ்ந்துள்ள இயற்கை அதாவது காற்று, நீர், மண், மரங்கள், மற்றும் எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கியது. இந்த இயற்கை வளங்கள் இல்லாமல் உயிர் வாழ மனிதனால் முடியாது. ஆனால் இன்று நாம் என்ன செய்கின்றோம்.
மாசு ஏற்படுத்துகிறோம்.
மரங்களை வெட்டுகிறோம்.
நீரில் கழிவுகளை கலக்குகின்றோம்.
எரிச்சலூட்டும் ஒலியை எழுப்புகிறோம்.
இப்படி மாசு மாசு மாசு என்கிறோமே!
ஆமா இந்த மாசு வர காரணம் தான் என்ன? என்று சிந்தித்து பார்த்தீர்களா?
சிந்தியுங்கள்!
நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு, அறிவியல் மாசு,... என்று அடுக்கி கொண்டே போகலாம்.
நிலத்தில் கலக்கும் ஆலை கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருளும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது. இதனால் பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுமே பாதிக்கப்படுகிறது
நிலத்தில் விளையும் காய்கறிகளின் நச்சு தன்மை படர்வதால் மனிதனின் உடலிலும் கலந்து குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு கலந்துள்ளது என்று மருந்துவ ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டுகளில் இதனை தடுக்க விவசாயத்தில் இயற்கை உரங்கள் அதாவது மாட்டுசாணி, பஞ்சகவ்யம், கம்போஸ்ட் organic farming கற்று தரும் விழிப்புணர்வு போன்றவையை பின்பற்றுவோம். தொழிற்சாலைகள் ETP அதாவது கழிவுநீர் சுத்திகரிப்பு முறை பின்பற்ற வேண்டும். நிலத்தை பாதுகாப்பது நம் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு சமம்.
வாழ்க்கையின் அடிப்படையில் ஒன்று நீர். இந்த நீர் எவ்வளவு முக்கியமானது என்று திருவள்ளுவர் கூறுகிறார், "நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு" நாம் மரங்களை வெட்டுவதால் மிருகங்கள் குடியிருக்கும் காடு இல்லை. காடு இல்லாததால் மழையில்லை. மழையின்றி நீர் இல்லை. இது எல்லோருக்கும் தெரிய வேண்டும். பூமியில் 70 சதவீதம் நீர் இருப்பினும் குடிநீர் 1 சதவீதம் மட்டுமே அதிலும் மாசு ஓங்கி நிற்கிறது நோய். தற்போது அகமதாபாத்தில் 12 நாட்களில் மட்டும் 340 வயிற்றுபோக்கு, 178 ஜாண்டிஸ், 216 டைபாய்டு, 8 காலரா காரணம் Bacteria மற்றும் குளோரின் சுத்திகரிப்பு இல்லாதது.
நீர் அருந்துவதற்கு முன் கொதிக்க வைக்க வேண்டும்.
Ro அல்லது UV வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும்
நீர் மாசு உங்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதனால் குடிக்கும் நீர் எப்போதும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
மூச்சு இல்லாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் இன்று மூச்சே மாசாகிவிட்டது. நாம் சுவாசிக்கும் காற்று நாளுக்கு நாள் அதிக மாசுபட்டால் நம்மை பாதிக்கிறது.
காரணம் – தொழிற்சாலைகள்
வாகனங்கள்
கட்டிட பணி தூசி
திட கழிவுகள் எரித்தல் போன்றவையே
இதில் பாக்டீரியா, தூசி, கார்பன்மோனாக்சைட், நைட்ரோஜன் ஆக்சைட், சல்பன்டைஆக்சைட் போன்ற நச்சுகள் மனித உடலுக்குள் நுழைந்து ஆஸ்துமா, மூச்சுதிணறல், நுரையீரல், புற்றுநோய் என்று பல நோய்கள் வர வேராகிறது. நம் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
எத்தனை பேர்க்கு தெரியும்?
விழிப்புணர்வு எங்கே?
மாணவர்களே!,
நீங்கள் முயன்றால் உங்கள் வீடுகளில் மாற்றம் உருவாக்கலாம். அருகில் செல்ல நடக்க பழகுவோம்,
சைக்கிள் Use பண்ணுவோம்,
E-Vehicle வரவேற்போம்.
அழியும் நிலைக்கு இட்டு செல்லும் அமைதியான கொலையை தடுபோம். குப்பையை எரிக்காமல் மறுசுழற்சி செய்வோம்.
மரம் வளர்போம்! காற்று மாசை தடுப்போம்!
ஆகவே நம் வாழ்வின் அடிப்படையான சுற்றுசூழலை பாதுகாப்போம். நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் நம்மை வாழ வைக்கும் நிலமும் இவ்வுலகின் பரிசு. ஆனால் நம் வளர்ச்சி என்று இயற்கையை அழிக்கிறோம். இப்படி தொடர்ந்தால் எதிர்கால தலைமுறைகளை சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் இருக்காது.
எனவே நாம் இன்றைய விதை! எதிர்காலம் நம் கையில், நமக்காக சுற்றுசூழலை பாதுகாப்போம்.
இயற்கையை காப்பது நம் வாழ்க்கையை காப்பது என்பதே உண்மை! மாணவர்களே! மரம் நடுவோம், நீரை சேமிப்போம், மாசை குறைப்போம் ஒரு துய உலகம் பசுமை பூமியை உருவாக்குவோம்.
BIBLE WITH NATURE
ஆதி 2:15ன்படி தேவன் சுற்றுசூழலை பாதுகாக்கவும் பண்படுத்தவுமே மனிதனுக்கு முதல் கட்டளையிட்டார்
யாத் 23:10-11ன் படி 6 வருடம் நிலம் விதைபோட்டு சாகுபடி செய் 7 ஆம் ஆண்டோ நிலம் ஓய்வு எடுக்கப்படும் என்று அதனை நாம் sustainable agriculture என்கிறோம்.
நீதி 12:10 ன்படி நீதிமான் மிருகத்திற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
வெளி 11:18 பூமியை அழிப்பவர்களை தேவன் அழிப்பார்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment